உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். முத்துமீரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். முத்துமீரான்
பிறப்புசின்னத்தம்பி முத்துமீரான்
(1941-05-03)3 மே 1941
நிந்தவூர், மட்டக்களப்பு, இலங்கை
இறப்பு4 சூலை 2024(2024-07-04) (அகவை 83)
நிந்தவூர், மட்டக்களப்பு
தேசியம்இலங்கை
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர்
பெற்றோர்சின்னத்தம்பி, மீரசாகிபு மீரா உம்மா

எஸ். முத்துமீரான் (3 மே 1941 – 4 சூலை 2024)[1] இலங்கையின் எழுத்தாளரும், கவிஞரும், நாட்டாரியல் ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் சகல துறைகளிலும் எழுதியவர். இலங்கை வானொலியில் தடாகங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.[2]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம்
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்
  • இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்
  • இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்
  • இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய் மொழிக் கதைகள்
  • கிழக்கிலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும் வாழ்வாதாரங்களும்

ஆகிய ஆறு நாட்டார் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.[2]

இவற்றுடன் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும், இரண்டு உருவகக்கதைத் தொகுதிகளையும், ஒரு நாடகத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.[2]

விருதுகள்

[தொகு]
  • இலக்கிய வேந்தன் - கலாச்சார அமைச்சு 2002
  • சாகித்திய பரிசு – வ.கி.கலாச்சார அமைச்சு 1994

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எழுத்தாளர் அல்ஹாஜ் எஸ். முத்துமீரான் காலமானார்!". 4 சூலை 2024. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2024.
  2. 2.0 2.1 2.2 "செம்மொழி மாநாட்டில் ஆய்வாளராக கலந்து கொள்ளும் முத்துமீரான்". தினகரன் (இலங்கை). 6 சூன் 2010. Archived from the original on 3 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
தளத்தில்
எஸ். முத்துமீரான் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முத்துமீரான்&oldid=4063830" இலிருந்து மீள்விக்கப்பட்டது