உள்ளடக்கத்துக்குச் செல்

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

இந்தித் திணிப்பு என்பது மொழி மேலாதிக்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் இந்தியைப் பிராந்திய மொழியாகக் கொண்டிராத அல்லது பயன்படுத்த விரும்பாத இந்திய மாநிலங்களில் இந்தியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் வேரூன்றியது. மதராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டபோது அது ஒரு சிக்கலாக மாறியது. மேலும்...


உருசியா என்பது கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியாவில் பரவியிருக்கும் ஒரு நாடு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நாடு இது தான். இது 11 நேர வலயங்களுக்கு விரிவடைந்தும், 14 நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டும் உள்ளது. உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும், ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் இதுவாகும். உருசியா அதிக அளவு நகரமயமாக்கப்பட்ட ஒரு நாடாகும். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 16 மக்கள் தொகை மையங்களை இது உள்ளடக்கியுள்ளது. மாஸ்கோ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். சென் பீட்டர்சுபெர்கு உருசியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும், இதன் பண்பாட்டுத் தலைநகரமும் ஆகும். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

  • துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
  • இந்தியாவிலேயே கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் தான் பணியாளர்கள் உட்கார்ந்து பணியாற்றுவதற்கான உரிமை சட்டப்படி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • மீனா நாராயணன் (படம்) தென்னிந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் ஆவார்.
  • இறகுப் பந்தாட்ட விளையாட்டின் ஆங்கிலப் பெயரான Badminton என்பது இங்கிலாந்தில் உள்ள Badminton மாளிகை என்னும் இடத்தின் காரணமாக அப்பெயரைப் பெற்றது.
  • மறைந்த திருத்தந்தை பிரான்சிசு தான் கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து தெரிவான முதல் திருத்தந்தை ஆவார்.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

ஏப்பிரல் 24: உலக ஆய்வக விலங்குகள் நாள்

ஜி. யு. போப் (பி. 1820· ஜெயகாந்தன் (பி. 1934· சூலமங்கலம் ஜெயலட்சுமி (பி. 1937)
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 23 ஏப்ரல் 25 ஏப்ரல் 26

பங்களிப்பாளர் அறிமுகம்

ராம்குமார் கல்யாணி என்பவர் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். தற்போது கேரளம் திருவனந்தபுரத்தில் தனியார் பொது நிறுவனம் ஒன்றில் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011 சூலை 28 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் அரசியல், தனிநபர்கள், சுற்றுலாத்துறை, திரைப்படங்கள், உளவியல், மெய்யியல் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

சிறப்புப் படம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை சித்தரிக்கும் ஒரு இத்தாலிய கலைப்படைப்பு. புனித ஜெரோம், அசிசியின் பிரான்சிசு, மகதலேனா மரியாள், திருமுழுக்கு யோவான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜோவானி கொலம்பினி ஆகிய பல புனிதர்களுடன்.

ஓவியர்: Pietro Perugino
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இலிருந்து மீள்விக்கப்பட்டது